மத்திய அரசின் மின்னணு மற்றும்
தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 2018
இல் ஒரு உத்தரவினை பிறப்பித்துள்ளது அந்த உத்தரவின் படி ஆதார் என்பது
ஒருவருடைய அடையாள ஆவணம் மட்டுமே ஆகும். அதை வைத்து பிறந்த தேதியை உறுதி
செய்வதற்கான ஆவணமாக பயன்படுத்த முடியாது என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இதைப் பற்றி இந்திய தனித்துவ
அடையாள ஆணையம் ஏற்கனவே ஆதார் என்பது ஒருவருடைய அடையாளம் தானே தவிர அவருடைய பிறந்த தேதி, வயது
ஆகியவற்றை இதை வைத்து உறுதி செய்ய கூடாது
எனவும் கூறியிருக்கிறது.
அதேபோல் 2023 ஆம் ஆண்டு
டிசம்பர் மாதத்தில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே ஒரு நபரின் பிறந்த தேதியை சரி
பார்ப்பதற்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆவணங்கள் பட்டியலில் இருந்து ஆதாரை நீக்குமாறு
கூறியிருக்கிறது.
இந்த ஆதார் அடையாள அட்டை
ஒருவருடைய அடையாளம் சான்று மட்டுமே எனவும் பிறந்த தேதிக்கான சான்று அல்ல என்று
ஏற்கனவே கூறியுள்ளது. தற்பொழுது மீண்டும் உச்சநீதிமன்றம் இதை உறுதி செய்துள்ளது.
