இந்தியாவில் பணவீக்கம் அதிகரிப்பதற்கான காரணங்கள்.


இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்திருப்பதாக மத்திய நிதித்துறை செயலர் துகில் காந்த் பாண்டே அவர்கள் ஒரு மாநாட்டில் கூறியிருந்தார். அப்படியானால் இந்தியாவில் தற்பொழுது பணவீக்கம் அதிகரித்துள்ளதா? என்கின்ற கேள்வி மக்களிடையே உருவாகின்றது. மேலும் இந்த பணவீக்கம் அதிகரிப்பதற்கு அவர் காரணமாய் கூறியிருப்பது தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, தங்கம் மற்றும் வெள்ளி ஆகும்.

முதலில் பணவீக்கம் என்றால் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டில் பணப்பழக்கம் அதிகமாக இருக்கும் ஆனால் உற்பத்தியான பொருட்கள் தேவையை விட குறைவாக இருக்கும் எனவே பொருட்களின் விலை அதிகரிக்கும். மக்களிடையே பணப்பழக்கத்தில் வரக்கூடிய பணத்தின் மதிப்பை விட விலையானது கூடிக்கொண்டே போனால் அதை பணவீக்கம் என்று கூறுகிறார்கள்.

பணப்புழக்கம் அதிகமாக இருந்தாலும் பணத்தின் மதிப்பானது குறைவாக இருக்கும் ஏனென்றால் விலைவாசி கூடுதலாக இருப்பதால் பணத்திற்கான மதிப்பு குறைவாக இருக்கும். எனவே 10 ரூபாய் கொடுத்து வாங்கிய பொருள் தற்பொழுது 15 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் இதைத்தான் பணவீக்கம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அப்படியானால் நாட்டில் விலைவாசி கூடிக் கொண்டே செல்கிறது என்று தான் அர்த்தம். பொதுவாக தானியங்கள், காய்கறிகள், பழங்கள் போன்ற அத்தியாவசிய தேவையான பொருட்களின் விலை உயர்வு தான் பணவீக்கம் ஏற்படுவதற்கு காரணமாகிறது. இந்தியாவின் பண வீக்கம் ஆனது ஆறு சதவீதத்திற்கும் மேல் உயர்ந்திருக்கிறது.

விலைவாசி தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தால் மக்களுக்கு தேவையான அடிப்படைப் பொருட்களை வாங்குவதற்கு சிரமங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே விலைவாசி குறைந்தால் தான் பணவீக்கமும் குறையும். மக்களிடம் புழக்கத்தில் இருக்கும் பணத்தை கொண்டு தேவையான பொருட்களை அவர்களால் வாங்க முடியும்.

பண வீக்கத்திற்கு காரணங்கள்


இந்த பண வீக்கத்திற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன முதலில் மக்கள் தொகை, இன்றைய இந்தியா உலகின் மக்கள் தொகையில் முதல் நாடாக இருக்கிறது. 100 கோடி மக்கள் தொகையை எட்டும் போது இந்தியாவில் 100 கோடி மக்கள் என்கின்ற பிரமிப்பான விவாதங்கள் இருந்தன. ஆனால் தற்பொழுது 100 கோடியும் தாண்டி 165 கோடியாக இந்திய மக்கள் தொகை உயர்ந்துள்ளது. 30 கோடி 40 கோடி என்று வாழ்ந்த இந்த நாட்டில் இன்றைக்கு 170 கோடியை நோக்கி மக்கள் தொகை உயர்ந்து கொண்டே போனால் அடுத்து வரக்கூடிய மக்களுக்கு வீடுகள், வேலை வாய்ப்புகள், அத்தியாவசிய பொருட்கள் போன்றவற்றிற்கான தேவை அதிகரிக்கும். அதிகப்படியான மக்கள் தொகையால் உணவு தேவை அதிகரிக்கும் இதைத் தொடர்ந்து விலைவாசியும் அதிகரிக்கும்.


மத்திய நிதித்துறை செயலர் கூறுகின்ற இந்த ஐந்து பொருட்களைப் பற்றி நாம் பார்க்கலாம். தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு இந்த மூன்றும் உணவுப் பொருட்கள் இத்துடன் சேர்த்து அவர் ஏன் தங்கம் மற்றும் வெள்ளியின் குறிப்பிடுகிறார். ஏனென்றால் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு இந்த மூன்றும் அனைத்து தரப்பட்ட மக்களும் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசியமான உணவுப் பொருளாகும் இதன் தேவை ஒவ்வொருவருக்கும் உண்டு. அதே சமயத்தில் தங்கம் மற்றும் வெள்ளி இவை இரண்டும் நடுத்தர மக்களால் சேமிப்புக்காக வாங்கப்படும் முக்கியமான விலை உயர்ந்த பொருட்களாகும். அப்படியானால் இந்தியாவில் நடுத்தர மக்களே அதிகம் வாழ்கிறார்கள் என்று அர்த்தம். ஏனென்றால் நடுத்தர மக்கள் தான் எதிர்காலத்திற்காக சிறுக சிறுக சேமிக்கும் பழக்கம் உடையவர்கள். அதனால் தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பொருட்களை சேமிப்பதற்காக அவர்கள் தொடர்ந்து வாங்குவதால் தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் உயர்கிறது அதை தொடர்ந்து பிற பொருள்களின் விலையும் உயர்கிறது.

இந்தியாவின் பொருளாதாரம் பெரும்பாலும் கிராமங்களை நம்பியே இருக்கின்றது ஏனென்றால் கிராமங்களில் தான் உணவு உற்பத்திக்கு தேவையான விவசாய நிலங்கள் அதிகமாக உள்ளன. மேலும் பிற உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களும் கிராமங்களில் இருந்து தான் பெறப்படுகிறது. அதனால் ஒரு நாட்டின் உற்பத்திக்கு முதன்மையாக இருப்பது விவசாயம் தான். எனவே மழைப்பொழிவும் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்யக்கூடிய முக்கிய காரணியாகும். ஏனென்றால் போதுமான மலைப்பொழிவு இருக்கும் பட்சத்தில் தான் விளைச்சல் என்பது நன்றாக இருக்கும். அப்பொழுதுதான் உற்பத்தியாக கூடிய பொருட்கள் மக்களின் தேவைக்கேற்ப அதிகமாக கிடைக்கும். பொருட்கள் அதிகமாக கிடைக்கும் போது தான் நமக்கு விலைவாசியும் குறைகிறது.

மேலும் வாசிக்க: 2025 ஆண்டில் கால நிலையில் எதிர்கொள்ளப் போகும் சவால்கள்.

கருத்துரையிடுக

புதியது பழையவை